Sunday, October 28, 2012

கலைமகளே! சரஸ்வதியே!

மனசாட்சியற்றுத் தாழ்ந்த மக்களும்
கலைகளிலே ஜொலிக்கமுடியும் என்றால்
என்ன பொருள் தாயே?
கலைச் சித்தாந்தங்களைத் தமக்கேற்ப வளைத்து
வகுத்துக் கொள்வோம் என்பதுவா?

வெண்டாமரை மலரில்
உனக்கு முன்னே வீற்றிருக்கும்
போதிசத்துவரையா கேட்கவேண்டும்?

அன்பு
உயிர்மை
மீமிகை உணர்ச்சிப் பெருக்குக்கான
தூய்மை – இவற்றொடு
தர்மத்துடனும்
தாகத்துடனும்
துக்கத்துடனுமான
முழுவாழ்வுடன்
தொடர்பேயில்லாத கலைகளைக் குறித்துக்
கவலைப்படவும் தகுமோ, சொல்?

ரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவாகவே
கலைஞர்களில் கலைஞர்களை
நான் பார்த்திருக்கிறேன் தாயே,
என் வாணாளில்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP