Wednesday, October 24, 2012

அற்ற குளத்தின்...

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும்
மண்ணோடு மண்ணாய் ஒட்டித்
தம் உயிர் பிடித்துக் காத்திருக்க,

விரையும் பொன்பறவை
வேக வேகமாய்
தன் சிறகுதொடும்
காற்றையும் கிளர்த்திக்கொண்டு
மேலெழுந்து மேலெழுந்து
மழை தேடிப் போகிறதோ
வெளியெலாம் துழாவியபடி?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP