Friday, October 12, 2012

முதன்மையிடம் உனக்கெனவே கொடுத்து

முதன்மையிடம் உனக்கெனவே கொடுத்து
நீர் நடுவே அழிந்துநிற்கும் மரங்கள்!
விண் ஒளிரும்
அப் பெருஞ் செயல் மாண்பை
யாவர்க்குமுரைக்கும் கோலமாய்
நீர் நடுவே பட்ட மரங்கள்மீது
சிறகொடுக்கி நிற்கும் பறவைகள்.

கானகத்து நடுவே
பூத்தொளிரும் வானகம்.

மாமலைகளும்
வான்மழை வணங்கித்
தம் இதயத்துள் பொதிந்த கோலம்.

கானகத்தின் – இன்னும் காணற்கரிய மாண்புகளைக்
காண வேண்டி அந்நீருக்குள்
கால் துடித்து நிற்கும் படகுகள்.

படகுகளைத் தம் தோள்மேல் சுமந்து
வலம்வரும் தாய்மை தந்தைமையைப்
புரிந்துகொண்ட அன்பு தானோ
அச்சம் நீங்கி
கரையெங்கும் தம் குடும்பத்தோடு
அமைதி கொண்டுலவும்
காட்டெருமைகளும் யானைகளும்
மான்களும் மிளாக்களும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP