Thursday, October 11, 2012

மலர்கள் குலுங்கும் மரம்

திடீரிட்ட
இன்பத்தின் காதற்கோலமோ என
பளீரிடும் மலர்க்கொத்துகளேந்தி நிற்கும்
பன்னீர்மரம்.

உற்றுக் கவனித்தால்
முதிராச் சிறுசிறு மொட்டுகளோடு
மலர விடைத்து நிற்கும் மொட்டுகளும்
கொள்ளை இன்பத்தாற் கெலித்த
ஒளிவிழிப் பூக்களோடு
கண்ணீர்க் கோடுகளென
காம்பினின்றிழிந்து தொங்கும் பூக்களும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP