Monday, October 29, 2012

தேநீரும் அவனும்

குளிர்சுக அறையுள் வந்துநிற்கும்
ஒரு தேநீரின் சூடு
அந்த அறையைப் பாதிப்பதில்லையா?
ஆனால் அந்த அறிவுகெட்ட குளுமை அறை
தன் உள்வேட்கைக்கெதிராகவே
அத் தேநீரைக் குளிரவைத்து
துயர்மூட்டிக் கொள்கிறதே!

அவனது இருப்போ
கவிதையின் சுரணை
அணையாத தழல்
கால இடங்களால்
தீண்டமுடியாத வெளி
இருளினைப்
பாதித்தேயாகும் ஒளி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP