Friday, October 26, 2012

நான் பார்த்ததில்லை எனினும்

நான் பார்த்ததில்லை எனினும்
ரிஷிப் பள்ளத்தாக்கினையும்
இமயமலைப் பனி ஒளிர்வையும்
போய்ப் பார்க்கக் கிடைத்த பாக்கியவான்
ஒருவரைச் சந்திக்க நேர்ந்தபோது
’பார்த்தவர்போல் தெரியவில்லையே’
என மனம் சோர்ந்து ஐயுற்றேன்
நான்தான் ரொம்பப் பார்த்தவன்போல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP