Sunday, October 28, 2012

வில்

பாய்ந்து வந்த அம்பைப் பற்றி
ஒன்றுக்குப் பத்தாய் முறித்துக்
காலின் கீழ் போட்டு
மிதி மிதி என்று மிதித்துப்
பொடிப் பொடியாக்கித் தீர்த்தும்
தீராக் கொந்தளிப்பின் மூச்சிரைப்பு!

”எய்தவனிருக்க
அம்பை நோவதென்ன?”

கையில் வில்லுடன்
விதிர்விதிர்த்து நின்றவனை நோக்கிச்
சிறுத்தையெனப் பாய்ந்தது கொந்தளிப்பு!

”வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
அவ் வில்லினைப் பிடுங்கிப்
பூழ்தி செய்திட்டாற் போதுமே!”

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP