Saturday, October 27, 2012

கோர சம்பவம்: ஓர் இரங்கற்பா (ஸ்ரீரங்கம். ஜனவரி 23. 2004.)

மெய்ம்மையை ஒளிவீசிப் பிடிக்கமுயலும்
கணப் பார்வை உக்கிரத்தை
குருட்டுத்தனமான வீம்புடன் எதிர்த்து
பற்றிக்கொண்டது
வேள்வித் தீ வெக்கையேறிய மண்டபம்

ஃபிலிமில் பதிந்தது
யாக நெருப்பு

உயிரிழந்து கிடந்த அலங்கோலம்
காணச் சகிக்காது
தானும் அவற்றோடழிந்து கிடந்தது
புகைப்படக் கருவியும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP