Sunday, October 7, 2012

பூ சிற்பம்

தோட்டத்திலிருந்த பூக்கள் சில
அறைக்குள்ளிருந்த பூ சிற்பம் கண்டு
எட்டி எட்டி நோக்கித்
தன் வியப்பால் மகிழ்ந்து கொண்டிருந்தன.

அவனைக் கண்டும்
அப்படி ஒரு இன்பப்புறம் நிலவுகிறது எனும்
நிச்சயமான ஒரு தோற்றம்
வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியினால்
நெளியச் செய்கிறதே அவனை!

காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த
அவனைப் பரிசளித்துக் கொள்கையில்
ஒரு சொல்லும் உதிர்க்காத
மாபெரும் சொல்லாகவன்றோ
மாறிவிடுகிறான் அவன்!

அவன் பூ சிற்பம் புது மதமொன்றின்
வழிபடு சிலையாக மாறி
பூக்களினை அறியாதாராகி விடுவாரோ மனிதர் எனில்
அவன் பூ சிற்பம்
அழிவிலாத உறுதியுடன்
அழியத் துடித்தபடி
வேண்டி நிற்பதுதான் என்ன?
தோட்டத்திலிருந்த பூக்கள் சில
அறைக்குள்ளே
எட்டி எட்டி நோக்கி
அதைத்தான் உரைத்துக் கொண்டிருக்கிறதோ
இப்போது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP