Friday, January 18, 2013

அவனைப் பற்றி

அவன் தலையில் மணிமுடியாகியிருந்தது
வேதனையின் பார்வை.
கால்களில் சிறு அணியாகியிருந்தது
காலத்தின் ஒரு துண்டு.
உடலுக்கு ஆடையாகியிருந்தது
இரு துருவங்களாலும் நெய்யப்பட்ட காலம்.
அவன் தாகத்திற்கு நீராகியிருந்தனர்
தவிப்பின் மனிதர்கள்.
தலைசாய்க்கக் கட்டிலாகியிருந்தது
முட்கள் தகிக்குமொரு பாறை.
நடப்பதற்குப் பாதையாயிருந்தது
மனித மனங்களின் நெகிழ்ச்சி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP