Tuesday, January 15, 2013

அய்யோ பாவம்!

அவனைத் தொட்டு எழுப்பிவிட்டு
தன் சமிக்ஞையைப் புரிந்துகொண்டு
பின்தொடர்வான் என்ற முழு நம்பிக்கையில்
திரும்பிப் பாராமல் செல்லும் சூரியனை
அய்யோ பாவம், அவன் அறியவில்லை

இருள் சூழ்ந்ததும் ஏற்றிய அறை விளக்கொளி
வீதியில் விழுந்ததையும்
விளக்கணைத்துப் படுத்துக்கொண்டதும்
வீதி விளக்கொளி அறைக்குள் விழுந்ததையும்
அய்யோ பாவம், அவன் அறியவில்லை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP