Thursday, January 24, 2013

நீயுமொரு கிறுக்கென்றால் வா

நீயுமொரு கிறுக்கென்றால் வா
உன்னிடம் மட்டும் சொல்லத் துணிவேன் அதை.
பல படிப்பாளிகளுக்கும் பண்டித சிரோன்மணிகளுக்கும்
வாய்க்காத
மேதமையின் இரகசியத்தை நான் உனக்குச் சொல்கிறேன்:

”எல்லாச் சொற்களும் கிட்டத்தட்ட
ஒரே பொருளையே குறிக்கின்றன”
மனதில் வை. யாரிடமும் இதைச் சொல்ல முனையாதே
எனக்குப்போல் உனக்கொருவன் கிடைத்தாலன்றி

ஊமையொன்று ஓர்
ஊமைதேடிப் போகும்
சரளமாய்ப் பேசிக் கொண்டிருக்க.
எவ்வளவு கொடுமையானது ஊமையொன்று
உளறுவாயனிடம் மாட்டிக்கொள்வது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP