Wednesday, January 16, 2013

இருள் பிரியாத

...இக்காலைப் போதில் நம் பிரார்த்தனைகள்
அடிபம்பின் ஒலிகளாய்
வறண்ட நெஞ்சொன்றை இடிக்கின்றன
ஒளி வரட்டும்
வறண்ட இந்நெஞ்சிற் புகுந்து
அது நீராய் நிரம்பட்டும்
நிரம்பி வழிந்து பெருகும்
அந்த வெள்ளத்தில்
உயிர்கள் மிதக்கட்டும்
நெஞ்சை இடிக்கும் பிரார்த்தனை ஒலிகள் மடியட்டும்
வெள்ளத்தின்மேல் சிறகடிக்கும்
பறவைகளின் ஒலிமட்டும் கேட்கட்டும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP