Saturday, January 26, 2013

கவிஞனின் புரட்சி

மூளை புகைந்து எழுந்த காமமோ?
உழைப்போ உள்தகுதியோ இன்றி
ஒய்யாரமாய் வாழ்ந்தது
தன் தொடர்ச்சியை விழையும் தவிப்போ?

எங்குபோய் நிற்குமிந்தத் தகிப்பு?

துதி தெறிக்கும் பூஜைகள்
பத்தினிப் பெண்டாட்டியும்
புத்திர உத்தமர்களும்
அண்ணாந்து பார்க்கும்படியாய்
அய்ந்தாறு சின்னவீடுகள்
செல்வம்
செல்வாக்கு
அதிகாரம்
அடக்குமுறை
கிளர்ச்சி
இரத்தக் களறி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP