Wednesday, January 16, 2013

அது ஒரு மாயம்தான்

அது ஒரு மாயம்தான்
ஒரே சமயத்தில்
வலிமைக்கே இலக்கணமாயும்
வலிமையே அற்றவனாயும்
அவன் காட்சி தருவது.
வலு மிக்கோர்க்கு அவன் வலு தெரியும்.
வலு மிக்கோர்க்கு அவன் வலு எதற்கு?
வலுவிலார் அவன் வலுவின்மையையே காண்பார்.
வலுவிலார் வலுவில்லாரை நெருங்கார்.
அவன் தனிமையின் இக்கதையில் மாயமில்லை.
தனிமைதான் ஒரு பெரும் மாயம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP