Tuesday, January 22, 2013

இரவோடிரவாக

...யாருமறியாவண்ணம் எழுந்து
இவ்வீதியைப் பெருக்கி முடித்துவிட்டு
யாருமறியாவண்ணம் வந்து படுத்துக்கொள்ள வேண்டும்
பூமலரக் காலையில் நீ உலாவுக்கு எழும்போது
உன்னை வியப்பிலாழ்த்த வேண்டும். அத்தோடு
என் காதலை நீ புரிந்துகொண்டு நெகிழும் உன் கோலத்தை
நீயுமறியாவண்ணம் ஒரு மூலையிலிருந்துகொண்டு
நாணத்தால் என் கன்னங்கள் சிவக்க
ஒளிந்து நின்று பார்க்க வேண்டும்
காதல் ரகசியத்தின் போதையை நான் அனுபவிக்க வேண்டும்

ஆனால் இவ்வெண்ணங்களே இன்று ஓர் உபாதையாகிவிட்டன
மடிமிகுந்து தூங்கிவிடுகிறேன்
ஒவ்வொரு காலையும் உன் முகத்தில் விழிக்கக் கூசுகிறேன்

வளர்ந்தபடியே இருக்கவோ இவ் வாதைகள்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP