Tuesday, January 15, 2013

வெற்றுக் குடத்தைத் துலக்குகிறாய்

வெற்றுக் குடத்தைத் துலக்குகிறாய்
எத்தனை கரிசனம் உன்முகத்தில்!
சூர்யக் கதிர்பட்டு ஜொலிக்கிறது அது,
அனைத்தினும் முக்யவஸ்து தான்தான் என்பதுபோல்

உன் இடையை அதற்காகவோ செதுக்கினான்?
மார்புகளைத் தாங்க வேண்டாமோ அது?
உன் கைகள் அதன் தோளிலே –
ரொம்பப் பிரியமோ அதனிடம்!

நீங்கள் அள்ளிவரும் நீருக்குத்தான்
காத்திருக்கிறதோ இந்த அகிலம்?
மனிதனின் பிணியையும் மருந்தையும் நீர் அறிவீரோ?
மனிதத் திலகங்களின் தாகத்தை நீர் அறிவீரோ?

வெற்றுக் குடங்கள் செய்வதையே முடிவான
வினையாக நான் இன்று தேர்ந்தெடுத்தேன்
வெற்குக் குடங்களே பெருஅலறல் செய்கின்றன,
உன் கைபட்டுப் பாடுகின்றன

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP